ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 22ஆம் தேதி வரை கடந்த ஐந்து மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். 41 கூட்டு பாலியல் பலாத்காரம் உட்பட 59 பெண்களுக்கு வன்புணர்வும் நடந்திருக்கிறது. இதனை அடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்திரவதை செய்வதாக 9,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வரதட்சணை தொடர்பான மரணங்கள் 24. வரதட்சணை சித்திரவதை தொடர்பாக 5398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.