உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் சம்பவங்கள் நடந்தாலும் அது வீடியோவாக சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக கட்டணம் வசூலித்ததாக கூறி இளம் பெண் தாக்கியதாக கூறுகிறார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை அந்தப் பெண் அடித்து அவமானப்படுத்தி விட்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறியுள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதாவது ஆட்டோவில் இருந்து அவர்களை இறக்கி விடும்போது தாங்கள் மாணவிகள் என்று கூறி அவர்கள் கட்டணம் தர மறுத்ததாகவும் தொடர்ந்து கட்டணம் பெற கேட்டதால் ஒரு மாணவி என் காலரை பிடித்துக் கொண்டு பின்னர் அவர் சகோதரியிடம் செல்போனை கொடுத்து வீடியோ பதிவு செய்யுமாறு ஆட்டோ ஓட்டுனர் தன் புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் இந்த வீடியோவை நான் பதிவிட்ட பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகவும் அதன் காரணமாகத்தான் வீடியோவை வெளியிட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும் இருவரின் பதிவுகளையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.