சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது நடிகர் சிங்கமுத்து தனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும் இதனால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது எனவும் அவர் தன்னை பற்றி அவதூறு பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தன் மனுவில் கூறியிருந்தார்.
அதோடு தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் நடிகர் வடிவேலுவுக்கு எதிராக நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசக்கூடாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் இனி வடிவேலு பற்றி நடிகர் சிங்கமுத்து கருத்து தெரிவிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.