உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கொரோனா காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 30% பேருக்கு பக்க விளைவு ஏற்பட்டதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐ சி எம் ஆர் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையானது உண்மை தன்மை இல்லை என்றும் சரியான தரவுகளோடு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆய்வறிக்கையை திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.