காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று  75 வயதில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி கூறியதாவது, காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அச்சமின்றி பரப்பும் ஒப்பற்ற தலைவர் இளங்கோவன். பெரியாரின் சிந்தனையை சீரிய முறையில் எடுத்துச் சென்றவர். ஈவிகேஎஸ் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.