
கங்கனா ரனாவத் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்திய வரலாற்றில் 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட கொந்தளிப்பான அவசர நிலை குறித்து பேசும் படம் தான் எமர்ஜென்சி. நாளை மறுநாள் ஜனவரி 17ஆம் தேதி எமர்ஜென்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வங்கதேச அரசு எமர்ஜென்சி படத்திற்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.