திருச்சி மாவட்டத்தில் உள்ளத்திற்கு காட்டூர் பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 36 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்காக பல இடங்களில் பெண் பார்த்துள்ளனர். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே திருமணமாகாதது குறித்து புலம்பியவாறு இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.