ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு… எந்தெந்த தேதிகளில் தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் மே 29, 30ல் தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 29ம் தேதி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மே 30ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல் தலைமை ஆசிரியர்களுக்கு மே 26, இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply