மத்திய உள்துறை அமைச்சர் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்தார். அங்கு அவர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் டெல்லியில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று கூறினார். இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அமித்ஷாவின் பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறியதாவது, ஆட்சி மாற்றம் என்பது அமித்சாவின் கனவு. டெல்லியில் விளையாடுவது போல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது. வட இந்தியா வேறு, தென் இந்தியா வேறு, டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு, தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பது இந்தியா அறிந்த உண்மை. ஆனாலும் தமிழ்நாட்டை டெல்லியை போல் மராட்டிய மாநிலத்தைப் போல் ஆக்கிவிடலாம் என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.