
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ஸ்ரீ அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
24 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் புதிய யானை ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலில் உள்ள சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்ய அந்த கோவில் ஆற்றில் இருந்து யானை தண்ணீர் எடுத்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
அதற்காக உயிருள்ள காட்டு யானைகளை சிறைப்பிடித்து பயன்படுத்துவது யானைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக பல்வேறு இயற்கை பாதுகாப்பு விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதனால் அதற்கு மாற்று வழியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை திரிஷா கிருஷ்ணன் மின்சாரத்தால் இயக்கப்படும் இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அந்த யானைக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. கஜா என்பது பைபர் மற்றும் சிலிக்கானாலான இயந்திர யானை. அந்த இயந்திர யானை கோவில் விழாவில் அருகில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு சிலைக்கு அபிஷேகம் செய்ய கொடுக்கும் நிகழ்வை அப்பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் அந்த யானைக்கு கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த யானையை பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற என்ஜிஓ நிறுவனம் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
அன்றைய தினம் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு நடிகை திரிஷா சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து நடிகை திரிஷா தெரிவித்ததாவது, “பக்தி இரக்கத்தில் வேரூன்றும் போது பிரகாசமாக பிரகாசிக்கிறது” என கூறினார்.