
இத்தாலியில் உள்ள மிலன் மல்பென்சா (Malpensa) விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் பயணி, தனது கையடக்கப் பையின் எடை அதிகமாக இருப்பதாக விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தபோது, அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த மறுத்தார்.
தொடர்ந்து, அவர் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் தரையில் விழுந்து ஒரு சிறு குழந்தையைப் போல அழத் தொடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது. இந்த சம்பவம் ஜூன் 8ஆம் தேதி போர்டிங் கவுண்டரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம், கூடுதல் பணம் செலுத்த வேண்டியதையோ அல்லது பையில் இருந்து சில பொருட்களை வெளியே எடுக்க வேண்டியதை அறிவுறுத்தினர். ஆனால் எதிர்பாராத விதமாக, அந்த பெண் தரையில் படுத்து கைகளை இடித்தும், கால்களை அசைத்தும் குழந்தையைப் போல் உருண்டு அழ ஆரம்பித்தார்.
View this post on Instagram
அதனை பார்த்த மற்ற பயணிகள் கண்கலங்கிப் பார்த்துவிட்டு விமான நிலைய ஊழியர்களின் உதவியை எதிர்நோக்கினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து பதில்கள் வந்துள்ளன. ஒருவர், “பள்ளிக்குச் செல்ல தயங்கும் குழந்தைகளைப்போல இருக்கிறது” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “வயதில் பெரியவள் போல தெரிகிறாள், ஆனால் நடத்தை ஒரு பசங்கதான்” என விமர்சித்துள்ளார்.
சிலர், “அந்த பெண்ணின் நிலையைப் பார்த்து நெஞ்சம் நொறுங்குகிறது” என அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.