
இந்திய நகரங்களுக்கிடையே செல்லக்கூடிய அதே விரைவு வந்தே பாரத் ஆகும். இந்த அதிவிரைவு வண்டியை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் மத்திய அரசு தொடங்கி வைத்தது. இவ்வாறு அதிநவீனமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் கூட சொகுசாக பயணிக்க முடியவில்லை என பயணி ஒருவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமீபத்தில் வைரலாகியுள்ளது. இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, முறையான பயணச்சீட்டு எடுத்தும் என்னால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இருக்கையில் அமர்ந்து செல்ல முடியவில்லை.
ஆனால் பயணச்சீட்டு எடுக்காத சிலர் மகிழ்ச்சியாக அமர்ந்து செல்கின்றனர் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.மேலும் முறையான ரயில்வே நிர்வாகம் இல்லை. மிகவும் மோசமாக உள்ளது எனவும், இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணச்சீட்டுகளை முறையாக கொடுப்பதில்லை. பயண சீட்டு விபரங்களையும் சரியாக சோதிப்பதில்லை என இந்த பதிவோடு ஒரு புகைப்படத்தையும் இணைத்து குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் பதிவை கவனித்த ரயில்வே துறை அந்த பயணியிடம் தங்களின் பயணச்சீட்டு விவரங்களை தெரிவிக்குமாறு கூறியது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் அளித்துள்ளது.