இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டி சமநிலை முடிந்ததால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது போட்டி வருகின்ற 26 ஆம் தேதி மெல்போரரில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் மெல்போன் புறப்பட்டு சென்றபோது விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் தனது குழந்தைகளை புகைப்படம் எடுத்ததாக கருதி விராட் கோலி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிக்கையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் வெளியான தகவலின் படி விமான நிலையத்தில் கோலி தனது குடும்பத்தை நோக்கி கேமரா இருந்ததும், குழந்தைகளை போட்டோ எடுத்ததாக கருதி கோபம் அடைந்துள்ளார்.

அதோடு எனது குழந்தைகளுக்கும் எங்களுக்கும் கொஞ்சம் தனி உரிமை தேவை. ஆகவே எனது அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் உங்கள் குடும்பத்தை நாங்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்கவில்லை என்று பத்திரிக்கையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரே விராட் கோலி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.