உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதை கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார். X- சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், உதயநிதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதில், உதயநிதியின் இளம் வயதும், அவரது உழைப்பும் தங்களை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“>

 

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே உங்களை வாழ்த்துகிறேன், உங்கள் அன்னையைப் போலவே நானும் மகிழ்கிறேன். இந்த உயர்வு பிறப்பால் வந்தது என்பதில் கொஞ்சம் உண்மையும் உங்கள் உழைப்பால் வந்தது என்பதில் நிறைய உண்மையும் இருக்கிறது. பதவி உறுதிமொழி ஏற்கும் இந்தப் பொன்வேளையில் காலம் உங்களுக்கு மூன்று பெரும் பேறுகளை வழங்கியிருக்கிறது.

முதலாவது உங்கள் இளமை இரண்டாவது உங்கள் ஒவ்வோர் அசைவையும் நெறிப்படுத்தும் தலைமை மூன்றாவது உச்சத்தில் இருக்கும் உங்கள் ஆட்சியின் பெருமை இந்த மூன்று நேர்மறைகளும் எதிர்மறை ஆகிவிடாமல் காத்துக்கொள்ளும் வல்லமை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

உங்கள் ஒவ்வோர் நகர்வும் மக்களை முன்னிறுத்தியே என்பதை மக்கள் உணரச் செய்வதே உங்கள் எதிர்காலம் என் பாடலைப் பாடிய ஒரு கலைஞன் துணை முதல்வராவதை எண்ணி என் தமிழ் காரணத்தோடு கர்வம் கொள்கிறது கலைஞர் வழிகாட்டுவார் துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.