வாச்சாத்தி கொடூரம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் புகுந்த தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை,  வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கிராம மக்களை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு 1992 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் நிலையில்,  2011 ஆம் ஆண்டு இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். தற்போது அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.