இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பகன் UNESCO அமைப்பால் வழங்கப்படும் ‘மைக்கேல் பட்டீஸ் விருது’-க்குத் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், வன அலுவலர் ஜகதீஷ் பகன் UNESCO விருது-க்குத் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்.

நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையை உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ்-க்கு என் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.