
தென் கொரியாவின் கேங்வோன் மாகாணத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் 50 வயது பெண் ஒருவர், தனது 20 வயது ஆண் சக ஊழியரிடம் “நகைச்சுவை” செய்யும் நோக்கத்தில் அவரது பேண்ட்டை பொதுயிடத்தில் இழுத்த சம்பவம் தற்போது பெரிய சட்டப்பூர்வ பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2024 அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்றது. அந்த பெண்ணின் செயலால் அந்த இளைஞரின் பேண்ட் மட்டும் அல்லாமல் உள்ளாடையும் சேர்ந்து கீழே விழுந்ததால், அந்த இளைஞர் பெரும் அவமானத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாட, இது “பாலியல் துஷ்பிரயோகச் செயல்” என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த வழக்கை விசாரித்த சோன்சியோன் மாவட்ட நீதிமன்றம், இந்தச் செயலை “அநாகரிக நடத்தை” எனக் கூறியுள்ளது. பெண்மணி இதை “ஒரு வழக்கமான கேலி செயல்” என விளக்கினாலும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, இது பாதிக்கப்பட்ட ஆணின் மரியாதைக்கும், மனநிலைக்கும் தாக்கம் கொடுத்தது. “இது நகைச்சுவை அல்ல. பாலியல் துஷ்பிரயோகம்” என கூறியது.
மேலும், இது ஒரு “இனப்பெருக்க அவமதிப்பு” (sexual humiliation) என்று வகைப்படுத்தி, பெண்மணிக்கு 2,000 அமெரிக்க டாலர் அபராதம் (சுமார் ரூ.1.75 லட்சம்) விதித்ததோடு, 8 மணி நேர பாலியல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க உத்தரவிட்டது.
‘பேண்ட்ஸிங்’ என்பது ஒருவரின் பேண்ட்டை திடீரென இழுப்பது போன்ற செயலைக் குறிக்கும். பலருக்கு இது நகைச்சுவை போல் தோன்றினாலும், பல நேரங்களில் இது மனவெதும்பும், அவமானப்படுத்தும் செயலில் முடிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு, தென் கொரியாவின் ஒலிம்பிக் சாம்பியன் லிம் ஹ்யோ-ஜூன், தனது கூட்டாளியின் பேண்ட்டை இழுத்ததற்காக ஒரு வருட போட்டி தடைச் சிக்கினார். இப்போதைய இந்த வழக்கும், அலுவலகம் போன்ற இடங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பிறரின் மரியாதையை இழிவுபடுத்தும் எந்தச் செயலையும் சட்டம் கடுமையாக எதிர்கொள்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.