இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட நேரம் வந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர் எஸ் எஸ் கும்பல் விரும்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறியதாவது பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டு வருவதில் மத்திய உள்துறை அமைச்சர் தோல்வி அடைந்து விட்டார். இந்த பயங்கரவாதிகள் பூஞ்ச், கங்கங்கீர் மற்றும் குல்மார்க் ஆகிய இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மணிப்பூர் விவகாரத்தில் கூட அவர் தோல்வி அடைந்து விட்டார். அவர் சாதித்தது எல்லாம் தனது மகனுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பை வழங்கியது மட்டும்தான். இப்போது உள்துறை அமைச்சர் மிகவும் ஆபத்தான அறிக்கைகளை வெளியிடுகிறார். லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆங்கிலம் தவிர்த்து அதிகமான இந்திய மொழிகளை பேசுகிறார்கள்.

ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பாக்கு பதவியை அமித்ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம் என்று தெரிவித்துள்ளார்.