முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். இவர் சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது,” பல்வேறு நாடுகளில் பேஸ்புக் உடன்பட முடியாத சட்டங்கள் உள்ளன. இதற்கு உதாரணமாக, பேஸ்புக்கில் பயனர் ஒருவர் பாகிஸ்தானில் எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர முயற்சித்துள்ளார். அதாவது பேஸ்புக்கில் பயனர் ஒருவர் முஸ்லிம் மத கடவுள் ஆன நபிகள் நாயகத்தின் உருவத்தை வரைந்து பதிவிட்டுள்ளார்.

அது தங்கள் கலாச்சாரத்தில் மறுக்கப்படுகிறது எனக்கூறி என் மீது பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டது. நான் பாகிஸ்தானிற்கு செல்ல போவதில்லை. எனவே எனக்கு அது குறித்து கவலை இல்லை”என தெரிவித்திருந்தார். பல்வேறு நாடுகளில் உள்ள விதிமுறைகள் மற்றும் கலாச்சாரங்களை மதித்து நடந்தும் சில நேரங்களில் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது சவாலாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.