
பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் தனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும்போது பலர் தன்னை உருவ கேலி செய்ததாக கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, எனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். அப்போது என்னை எல்லோரும் கேலி செய்தார்கள், உனக்கு கோழி கால்கள் உள்ளன, நீ தீக்குச்சி போல இருக்கிறாய் என்றெல்லாம் கூறினார்கள்.
இப்போது நான் வளர்ந்து விட்டேன் அப்படி இல்லை. இப்போதும் நீ அறுவை சிகிச்சை செய்து விட்டாய், அதை செய்து விட்டாய், இதை செய்து விட்டாய் என்று கூறுகிறார்கள். நீங்கள் எந்த ஷேப்பில் இருந்தாலும் எந்த சைஸில் இருந்தாலும் சரி, மக்கள் தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதுவும் குறிப்பாக பெண்களைத்தான் விமர்சிப்பார்கள் ஆண்களை அப்படி யாரும் விமர்சிப்பது கிடையாது. பெண்கள் மீதான இந்த வெறுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.