முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் வராத ஒன்றை, புலி வருது, புலி வருது என்று பூச்சாண்டி காட்டும் வேலையை தான் முதலமைச்சர் தொடர்ந்து செய்கிறார் என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவருக்கு, எங்களுக்குப் போதிக்க எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை – நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசலில் உள்ளது.

உங்கள் டெல்லி எஜமானர்களிடம் அவர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்று சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கோருவதில்லை. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாங்கள் குரல் எழுப்புவோம். நீங்கள் விற்றுவிட்டீர்கள். நாங்கள் மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.