
நடிகர் விஜய் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார். அதேபோன்று இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்ட பாராட்டு விழா நடைபெறும் என்று தவெக சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். இந்த பொது தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர்கள் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக 30.5.2025 வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்திலுள்ள 4 பாய்ண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.