தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 90 நாட்களுக்குள் அனைத்து வகை மசோதாக்கள் மீதும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

பத்து மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றாமல் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து வந்த ஆளுநர் ஆர் என் ரவி அவர்களுக்கு இன்று உச்ச நீதிமன்றம் சரியான பாடம் புகட்டி உள்ளது. ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு தலைவரை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.