மாணவர்களின் கல்வி தேவைகளை நவீன முறையில் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமேசானுடன் கூட்டாண்மை செய்து, பள்ளி பாடப்புத்தகங்களை அசல் விலைக்கே ஆன்லைனில் வழங்க முடிவு செய்துள்ளது. மாணவர்களின் படிப்பு செலவினங்களை குறைப்பதற்காகவும், அவர்களுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி, அரசு வெளியிடும் பாடப்புத்தகங்களை பெறுவதற்கான வழியை இந்த ஒப்பந்தம் துவக்கமாகின்றது.

அமேசான் வலைதளம் மூலம் பாடப்புத்தகங்களை பெறும் வசதி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். NCERT ஏற்கனவே அதிக விலைக்கு சந்தையில் வெளியிடப்பட்டு வந்த திருட்டு புத்தகங்கள் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. தற்போது இந்த பாடப்புத்தகங்களை நேரடியாக அமேசான் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், பெற்றோர்கள் ஏமாற்றமின்றி அசல் புத்தகங்களை வாங்குவார்கள் என்று NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி குறிப்பிட்டார்.

அமேசான் விற்பனை மூலம் பெற்றோர்களின் பிரச்சனைகளை தாண்டி, அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்போது ஏமாற்றம் இன்றி, துல்லியமான மற்றும் தரமான பாடப்புத்தகங்களை அசல் விலைக்கே வாங்கலாம்.

இந்த கூட்டாண்மை மூலம் கல்வித்துறை மேலும் வளர்ச்சியடையும் என்று கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். NCERT ஆண்டுக்கு 5 கோடி புத்தகங்களை வெளியிட்டு வந்தாலும், இவ்வாண்டு புத்தக வெளியீட்டு எண்ணிக்கை 15 கோடியாக உயர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த கல்வியாண்டில் 4, 5, 7, மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. 3 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் சில, தற்போதைய ஆண்டிற்கே வெளியிடப்பட்டு, இப்பொழுது அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.