சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 16-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிகக் கடுமையான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 24 மணிநேரத்தில் 204.5 மில்லிமீட்டர் அல்லது அதற்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்ற காரணத்தால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ரெட் அலர்ட் விடுக்கப்படும் இடங்களில், மழை மிக அதிகமாக பொழியும் என்பதால், அந்த பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.