
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 15 மாவட்டங்களில் இரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.