
நடிகை ராஷ்மிகா மந்தானா சமீபத்தில் குபேரா படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடித்து வெளியாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக பட குழு வெளியிட்டுள்ளது.
Raised with grit.
Relentless in will.
She roars.
Not to be heard, but to be feared.🔥Presenting @IamRashmika in her FIERCEST AVATAR in & as#MYSAA ❤️🔥
Directed by @RawindraPulle
Produced by @unformulafilmsA PAN INDIAN FILM 🇮🇳#RashmikaMandanna pic.twitter.com/aqnuUoWLC1
— UnFormula Films (@unformulafilms) June 27, 2025
அந்தப் படத்திற்கு “மைசா” என பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தினை அன் ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார்.
மேலும் இந்த படம் குறித்து இயக்குனர் ரவீந்தர் கூறியதாவது, இந்தப் படம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா கடுமையாக உழைத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட படமாகும். அதாவது இந்தப் படம் கோண்ட் பழங்குடியினரின் சுவாரசியமான உலகத்தை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டதாகும். இது ஒரு உணர்ச்சிகரமான ஆக்சன் திரில்லர் திரைப்படம் என தெரிவித்துள்ளார்.