தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது ஒபலி என்.கிருஷ்ணா டைரக்டில் “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனிடையே சிம்புவுக்கு 40 வயது நெருங்கிய நிலையில், இதுவரையிலும் திருமணம் ஆகவில்லை.

அண்மையில் சிம்புவுக்கு இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளை அவரது வீட்டார் பார்த்துள்ளதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் புது தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியது. இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து “இலங்கை தமிழ் பெண் ஒருவரை அவர் செய்ய உள்ளதாக பரவிய செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். திருமணம் பற்றிய தகவல் உறுதியானால் நாங்களே முதலில் ஊடகத்திடம் சொல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.