
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாத்ராக் பகுதியில் ஜோதி ரஞ்சன் தாஸ் என்ற என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சன் தாஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது காதலியை தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சன் தாஸ் கோபத்தில் இளம் பெண்ணின் வீட்டை தீவைத்து எரித்து விட்டார்.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதாக காதலன் தன்னை மிரட்டியதாகவும் இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தப்பியோடிய ரஞ்சன் தாசை தேடி வருகின்றனர்.