ஹீரோ, வில்லன், குணசித்ரா கதாபாத்திரம் போன்ற எந்த வித ரோல் கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து வருபவர் தான் சத்யராஜ். இவருக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திவ்யா தன் தாய் குறித்து வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதன்படி சத்யராஜ் மனைவி கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக கூறினார். இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படத்தியது.

இதனால் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இருப்பினும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட் கலையும் போட்டு வந்தனர். நடிகர் சத்யராஜ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதுமற்றுமின்றி அவர் பெரியாரைப் பின்பற்றுவதால், பல மேடைகளில் கடவுளைத் திட்டி பேசியுள்ளார். இதனால்தான் அவரது மனைவி கோமாவில் உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஜீப்ரா படத்தின் ப்ரோமோஷனில் செய்தியாளர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏன் சாமி கும்பிடுறவன் வீட்ல எவனும் சாகலையா? லூசு பசங்களா இருக்கானுங்க. சாமி கும்பிடுவதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. சாமி கும்பிடுபவர்கள் வீட்டில் உடம்பு சரியில்லாமல் போவதில்லையா? காய்ச்சல் வருவதில்லையா, தலைவலி வருவதில்லையா. இந்த மாதிரி உளறுபவர்கள் உளறிக் கொண்டே இருப்பார்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று கூறினார்.