
18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து வருகின்றனர்.
அதன்படி இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தான் தேர்வு செய்த பிளேயிங் லெவன் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சப்மன் கில், பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
முழு பட்டியல் இதோ..
விராட் கோலி, சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென், நமன் திர், குருனால் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், பிரசித் கிருஷ்ணா.