மகளிர் டி20 உலகப் கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து அணியிடம் மோதிய நிலையில் மிகவும் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் போட்டியில்  பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்த நிலையில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி தற்போது பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சபாலி வர்மா 39 ரன்களும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 29 ரன்களும் எடுத்தார். மேலும் முன்னதாக ஆடவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் தற்போது இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தானை வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.