தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இது தனுஷின் 51-வது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய தனுஷ் கூறியதாவது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள நெகட்டிவ் விமர்சனங்களை குறித்து எமோஷனலாக பேசினார். அதன் பின் ரசிகர்களுக்கு ஒரு அன்பான அறிவுரை கூறினார். அதாவது சந்தோஷமா இருங்க சந்தோஷத்தை வெளியே தேடாதீங்க சந்தோஷம் உங்களுக்கு உள்ள தான் இருக்கு. சந்தோஷம் ஒரு சாய்ஸ் நான் ஒரு வேலை சாப்பாட்டுக்கு வக்கில்லாமலும் இருந்திருக்கிறேன்.

இப்போ ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன் எந்த நேரமும் சந்தோஷத்தை வெளியே தேடியது கிடையாது. சந்தோஷம் நிம்மதிக்கும் மேல எதுவும் முக்கியம் கிடையாது நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். இவ்வளவு வருடம் கழித்து எல்லாரும் பேசும் போது அதை தாண்டி எனக்காக எல்லாரும் இருக்கீங்கல நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். நிறைய பேர் பல ஊர்களில் இருந்து இங்க வந்திருக்கீங்க எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போய் சேருங்க. பைக்ல ஃபாலோ பண்ணாதீங்க நான் அதை ஆதரிக்க மாட்டேன். உங்க சந்தோஷத்தை விட உங்க பாதுகாப்பு எனக்கு முக்கியம் என்று கூறினார்.