கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கிய “கேஜிஎஃப்” படத்தின் மூலம் உலக பிரபலமானார்.  இதைத் தொடர்ந்து யாஷ் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “டாக்ஸிக்” (toxic) என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை கே.வி.என் என்ற பிரபல தயாரிப்பு குழுமம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை ஆகஸ்ட் மாதம் 8ஆம்  தேதி நடத்தி தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த வனப்பகுதியில் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான மரங்கள் படப்பிடிப்புக்காக வெட்டப்பட்டுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெங்களூர் மாநில வன அதிகாரி ஈஸ்வர் கண்ட்ரே  விசாரணை நடத்தினார். இதன் பின்னர் டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஹிந்துஸ்தான் மெஷின் டூல் மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். மேலும் படத்தை தொடர்ந்து எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட குழு மிகவும் பாதிப்படைந்துள்ளது.