மகாராஷ்டிரா மாநிலத்தில் பாண்டுரங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில் கடந்த 16ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். பின்னர் அவருடைய உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அப்போது சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கிய போது அவருடைய உடம்பில் அசைவுகள் காணப்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது குணமடைந்துவிட்டார். மேலும் அவர் வேறு ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர்ப்பிழைத்துவிட்டார். இது அவருடைய குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.