காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். உரிமையாளருக்கு மட்டும் 9 மாத சிறை தண்டனையும் 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.