
பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே பாமகவில் பிரச்சனைகள் என்பது இருக்கும் நிலையில் தற்போது வெளிப்படையாகவே அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் பாமக இளைஞரணி சங்க தலைவர் பொறுப்பை முகுந்தன் ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸ் எங்கள் குலதெய்வம், அன்புமணி ராமதாஸ் எங்கள் எதிர்காலம் என ராஜினாமா கடிதத்தில் முகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.
