இந்தி நடிகையும், மாடலுமான ஷெபாலி ஜரிவாலா(42) . இவர் பிக் பாஸ் 13 என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடனடியாக பெல்லோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு சென்றதும் அங்கு இருந்த வரவேற்பு ஊழியர்கள் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். அதாவது ஷெபாலியை அவரது கணவர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் அவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ஷெபாலியை சோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இதனை அடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஷெபாலியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவரது இறப்பிற்கு தொலைக்காட்சி பிரபலங்கள் சினிமா திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இச்செய்தி ஹிந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.