
அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறினார். இதையடுத்து காவல்துறையினர் நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் ரத்தம் மாதிரிகளை எடுத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.
அதன் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் இடம் நடத்திய விசாரணையில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் தன்னுடன் கொக்கைன் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறினார்.
இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் போதை பொருளை பயன்படுத்தியது குறித்தும், போதைப்பொருள் விற்பனை செய்தாரா அல்லது போதை பொருள் விற்பனை செய்பவருடன் தொடர்பில் இருந்தாரா என்று பல கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் போதைப் பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை என்று அந்த மனதில் கூறப்பட்டிருந்தது.