
இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என்று பேரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் இன்று அரங்கேற்றம் செய்கிறார். இதன் மூலம் அவர் இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைக்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று இளையராஜா லண்டன் கிளம்பிய போது, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அவரிடம் தேவா தன்னுடைய இசையை இளைஞர்கள் இலவசமாக பயணப்படுத்தலாம் என்றாரே அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு இந்த மாதிரி அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கலாமா? என்று அவர் கூறினார். உங்கள் அனைவரின் சார்பாக தான் லண்டன் செல்கிறேன். இது நாட்டின் பெருமை என்றார். ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, மனுஷனாக எப்படி உணர்கிறேன் என்று கேளுங்கள்? இப்படிப்பட்ட இடைஞ்சலான கேள்விகளை கேட்காதீர்கள் என்று அவர் கூறினார்.