18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது.

தற்போது குஜராத்திலிருந்து பெங்களூருக்கு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில் சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து வீரர்கள் பெங்களூரு நகரில் ஊர்வலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சின்னசாமி மைதானத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலை மோதுவதால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலை மோதியதில் தற்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.