தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் முதல் கட்டமாக 2582 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேர்தல்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

இதனால் போட்டி தேர்வு எழுதும் தென் மாவட்ட ஆசிரியர்களின் நிலையை கருதி தேர்வு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டை வைத்து தேர்வுகள் தேர்வு எழுதலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.