
சமீப காலமாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதால் சீமான் அதிர்ச்சியில் உள்ளார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் செயலாளர் உள்பட 50 பேர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி விட்டனர். கட்சியில் யாருக்கும் மரியாதை இல்லை எனவும், சீமானை சந்திக்கவே முடியவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருவதாகவும், கட்சியிலிருந்து விலகியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.