ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் எம்.எஸ் தோனி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜடேஜா, சிவம் துபே,, ருதுராஜ்‌ கெய்க்வாட், பத்திரனா ஆகிய 5 வீரர்களை தக்க வைப்பதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோகித் சர்மா விளையாட இருக்கிறார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிகள் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ரோகித் சர்மாவை 16.30 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று ஹர்திக் பாண்டியாவை 16.35 கோடி ரூபாய்க்கும், சூரியகுமார் யாதவை 16.35 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மாவை 8 கோடி ரூபாய்க்கும், பும்ராவை 18 கோடி ரூபாய்க்கும் மும்பை அணி தக்க வைத்துள்ளது மேலும் ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணியில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.