மலையாள சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த டி.கே வாசுதேவன் உடல் நலக்குறைவினால் தற்போது காலமானார். இவர் கடந்த 1960களில் மலையாள சினிமாவின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். இவர் நடிகர், இயக்குனர் மற்றும் கலை இயக்குனர் என்ற பன்முக திறமைகளை கொண்டவர். இவர் பிரபலமான செம்மீன் திரைப்படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அதன்பிறகு எண்டே கிராமம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு 89 வயது ஆகும் நிலையில் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். மேலும் வாசுதேவன் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.