ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும் நிலையில், கோவிலில் மூலவர்களாக இருக்கும் பாலபத்திரர், பூரி ஜெகநாதர், சுபத்ரா தேவி ஆகிய மூன்று தெய்வங்களும் தனித்தனி ரதங்களில் வலம் வருவார்கள்.

இந்நிலையில் பூரி ஜெகநாதர் ஆலய கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம்  தொடங்கிய  நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 50-கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்போது மாநில முதல்வர் தலா  25 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வெளியிட்டுள்ளார்.