குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 1:38 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 1:40 மணிக்கு விமான நிலைய எல்லையை கடக்கும் முன்பே விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.

விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 252 பேர் பயணம் செய்துள்ளனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகளின் தேசிய அடையாள விவரங்களின்படி, விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கனடா குடிமகன் இருந்ததாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து காரணமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக விமான இயக்குநரகம் அறிவித்துள்ளது.