
தனுஷ் நயன்தாராவுக்கு இடையே இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே. நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட பாடலை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன் பிறகு நயன்தாரா தனுஷை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனதை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் நானும் ரவுடிதான் பட காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் வருகிற ஜனவரி மாதம் 8-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் இடைக்கால தடை கூறும் மனு மீது ஜனவரி 8-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.