
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்கு தான் தொடர்ந்து இருக்க வேண்டும். உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறுவதற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. ஸ்டாண்ட் அப் காமெடியன் ஏதாவது கூறினால் கூட புண்படுத்தி விட்டதாக கூறி வன்முறையில் ஈடுபடுகிறீர்கள் என நீதிபதிகள் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.