திமுக கூட்டணியில் பல முரண்பாடுகள் உள்ளதால், இந்தியா கூட்டணி போலவே திமுக கூட்டணியும் உடையும் என EX மினிஸ்டர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை போல் “அண்ணா, அண்ணா” என போலி கும்பிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை. பாஜக என்ற பெட்டியை கழற்றி விட்டோம். இனி அந்த பெட்டியை இணைக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறிய அவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.